வலியில்லாமல் பலனில்லை….
என்பதை உணர்ந்தவர்கள் நிச்சயமாக வாழ்க்கையில் சாதிப்பார்கள். சாதிப்பவர்களின் வாழ்கையில் ஆயிரம் வலிகள் இருக்கும். அவ்வலிகளைத் தாண்டி அவர்கள் வாழ்க்கையில் சாதிக்கும்போது வாழ்க்கையின் சுவையை உணர்வார்கள். நம் வாழ்க்கையில் வலிகள் வரும்போது நாம் துவண்டு போகாமல் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் போராட வேண்டும். நம் பள்ளிப்பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் நாம் துவண்டு போகும் நிலைமைக்கு தள்ளக் கூடிய வலிகளும் தோல்விகளும் வந்து போகும். அவ்வலிகளுக்கும் தோல்விகளுக்கும் நாம் துவண்டுபோகாமல் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் போராட வேண்டும். வலிகளைக் கடந்து தோல்விகளைத் தாண்டி சாதிப்போம்.
பெ.மு. சுபஸ்ரீ
9 ‘அ’