
நீர் நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒரு பங்கை வகிக்கிறது. எனவேதான் திருவள்ளுவர் மழையை அமிழ்தம் என்கிறார். இளங்கோவடிகளும் ‘மா மழை போற்றுதும்’ , என்று மழையைப் புகழ்ந்துள்ளார். ‘மேல் நின்று தான் நல்கலான்’என்றும் கூறியுள்ளார். ஒரு நாட்டின் வளம் மழை வளத்தை அடிப்படையாக வைத்துதான் கணக்கிடப்படுகிறது. நீர் மூலம் மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. உப்புக்காக , உரிமைக்காக , சுதந்திரத்திற்காக போராடிய நாம், தற்போது நீருக்காகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். மழைநீர் தான் நமக்கு மிகுதியான அளவு நீரைத் தருகிறது. நாம் காற்றை மாசுபடுத்துவதால் மழை நீரின் தன்மை அமிலமாக மாறி தாவரங்களையும், விலங்குகளையும், மனிதர்களையும் , வாழ்விடங்களையும் பாதிக்கிறது. நமது எதிர்காலம் நமது நிகழ்காலத்தின் செயல்களால்தான் நிகழ்த்தப்படுகிறது. எனவே. நாம் நீரின் அருமையை அறிந்து, நமது எதிர்காலத்தைக் காக்க வேண்டும்.
மழை நீர் உயிர் நீர் !
மு.அமிர்தா
X A
