
எழுந்திரு கண்ணே மணி 7 ஆகிவிட்டது.
அம்மாவின் கூச்சலில் அதிர்ந்தெழுந்தேன்.
எங்கே நான் சுவாசித்த காற்று;
நேசித்த பூக்கள்; யோசித்த இயற்கை?
ம்ம் ….. ஏசி காற்றில்
இயற்கை மடிந்தது; தூசிக் காற்றில்
ஆரோக்கியம் குறைந்தது;
அறிவில் பாசி படிந்தது;
நாசித்துவாரம் அடைத்தது;
காய்கின்ற மரங்கள் ஏங்கின.
கரங்கள் நீட்டி எனை அழைத்தன.
அன்று முடிவெடுத்தேன் நான்.
மரங்கள் வளர்ப்போம்!
மழைப்பெறுவோம்!
காடுகளை வளர்ப்போம்!
மனித வாழ்வை மேம்படுத்துவோம்!
இயற்கையை நேசிக்கும்
வெ.மதுரபாலா
12-ஆ
