
சூரியன் உதித்தால் பூக்கள் பூக்கும்
மழை பெய்தால் தாகம் தணியும்
தென்றல் தீண்டினால் உள்ளம் மகிழும்
நிலம் இல்லையெனில் வாழ்வு இல்லை
வானம் இல்லையெனில்
vஎல்லையற்ற கனவுகளில்லை
வேளாண்மையே
நம் நாட்டின் முதுகெலும்பு
வேளாண்மை
உடைந்தால் நம் நாடென்னவாகும்
நாமென்னவாவோம்
சிப்பிக்குள் விழுந்த நீர்
முத்தாகும்
விதைத்த நிலத்தில் விழும் நீர்
பயிராகும்.
முத்தாகும் நீரினை சிப்பி பாதுகாக்கும்
பயிராகும் விதைகளை விவசாயி பாதுகாப்பான
அந்நிய நாட்டினரையும் வாருங்கள் என அழைத்து
வயிறு நிறைந்த பின் அனுப்பும் இந்திய நாட்டில்
வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு வயிறு நிறைய
உணவு அளிக்க
வேளாண்மை வேண்டும்.
வேளாண்மையை வளர்த்து நிலைநாட்டுவோம்!!
விவசாயிகளை தெய்வத்திற்கு நிகராக மதிப்போம்!!!
மு. அமிர்தா
11 ‘அ’
