
வானத்திலுள்ள விண்மீன்களும் நட்சத்திரங்களும் மனிதனின் ஆர்வத்தைத் தூண்டின. அதுவே, விண்ணியல் ஆய்வின் தொடக்கமாகும். பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே மனிதர்கள் இவ்வாய்வைத் தொடங்கினர். ஆர்யபட்டா என்னும் விஞ்ஞானி தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார். அதன்பின் பலர் விண்ணியல் ஆய்வை மேற்கொண்டனர். அக்காலத்து கிரேக்க மன்னர்களும் அதில் ஆர்வம் மிகுந்தவர்களாக இருந்தனர். ஆதலால், விஞ்ஞானிகளின் பொருட்செலவை அவர்கள் ஏற்றுக்காண்டார்கள். பின்னர், கெப்லர் என்னும் விஞ்ஞானி விண்ணியல் ஆய்வை மேற்கொண்டு பல சாதனைகளைப் படைத்துள்ளார். ஏனென்றால், மெகலனின் உலகம் சுற்றும் முயற்சிக்கு கெப்லரின் ஆய்வுகள் உதவியாக இருந்தன. மெகலன் ஆப்ரிக்காவின் தீவு ஒன்றில் மாட்டிக் கொண்ட போது காப்பர்நிகஸ் என்னும் கெப்லரின் நண்பன் அளித்த விண்ணியல், கிரகணங்கள் பற்றிய ஆய்வுகள் (கெப்லருடையது). மெகலனுக்கு பெரிதும் உதவியது.
பல விஞ்ஞானிகள் நம் பூமிக்கு வெளியே சென்று ‘மில்கி வே கேலக்ஸி’ என்ற ஒன்று இருப்பதையும் அறிந்து கொண்டனர். பலர் இதன் மூலம் நாம் வேற்று கிரகத்திலும் வாழ இயலும் என்பதனை உணர்த்துகிறார்கள். பலர் இதன் மூலம் காலப் பயணமும் சாத்தியம் என்று பல விண்ணியல் விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இக்கருத்தைப் பெரிதும் சிந்தித்து ‘டைம் மெஷின்’ என்னும் ஓர் புத்தகத்தை எச்.ஜி.வெல்ஸ் என்னும் ஆங்கில எழுத்தாளர் எழுதியுள்ளார்.
அதில் அவர் விண்ணியல் பற்றிய பல வியக்க வைக்கும் கருத்துகளைக் கூறியுள்ளார். சாதாரண ஒரு மனிதனின் ஆர்வம் தற்பொழுது அறிவியலின் மிகப்பெரிய கூறுகளில் ஒன்றாகிய விண்ணியலுக்கு வழி வகுத்துள்ளது.
சா.பிராங்க் வருணன்
X அ
