தாய்

நான் நேசித்த முதல் உயிர் நீ .

நான் கண்ட முதல் ஓவியம் நீ  .

நான் ரசித்த முதல்  பாடல் உன் தாலாட்டு  .

என்னை இவ்வுலகிற்கு காட்டிய முதல் தெய்வம் நீ  .

என் கண் கசிந்த போதெல்லாம் ,

மனம் உன்னையே தேடும்.

நான் உறங்கிய முதல் இடம் உன் கருவறை.

உலகில் மொத்தம் ஏழு அதிசயம் என்று கூறுகின்றனர்.

இல்லை  இல்லை

உலகில் ஒரே ஒரு அதிசயம் தான் உண்டு  .

அது நீ தான் என் தாயே !

 VARUNA  A R

                                                                                         XI ‘A’