அழகு

அழகு

தந்தையின் கைப் பிடித் துலா

வரும் மழலையின்poem1

சிரிப்பு – அழகு

தன்னுலகமே பெயரெனென

நினைக்கும் தாத்தாவின்

திண்ணம் – அழகு

சொந்தங்கள் புறந் தள்ளினாலும்

அரவணைக்கும் அன்னையின்

அகம் – அழகு

ஆசானை உயர்த்தும்

மாணவனின்

மதி – அழகு

வெற்றியைத் தேடி

ஓடும் வீரனின்

வேகம் – அழகு

தோற்றாலும் துவளாதே யெனத்

தோள் கொடுக்கும் தோழனின்

நட்பு – அழகு

பிரச்சனையின் தீர்விற்கு

முடிவெடுக்கும்

மெளனம் – அழகு

கண்மூடி முகிலில்

உலாச் செல்லும்

கற்பனை – அழகு

வானமே குடையாய்

புல்வெளியே விரிப்பா யிருக்கும்

குவலயம் – அழகு

நித்தம் நம்மோடு

நடை பயிலும்

நிகழ்வுகள் – அழகு

அழகத்தனையும் இரசித்திடு

மனமது மகிழ்வடையும்

உன் கண்ணோடு!

த. செல்வராணி

தமிழாசிரியை

என்.எஸ்.என். நினைவுப்பள்ளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *