என் வழிகாட்டி

டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

என் வழிகாட்டி “டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். இவர் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி பிறந்தார். இவர் மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் பொறியியல் படித்த விஞ்ஞானி ஆனார். அப்துல் கலாம் அவர்கள், ஒரு முறை ஜனாதிபதியாக இருந்தார். இவர், என் வழிகாட்டியாக abj4இருக்கக் காரணம், இவர் குழந்தைகள் மீது மிகவும் அன்பு கொண்டவர். ஒருமுறை ஆப்பிரிக்கா நாட்டைச் சார்ந்த ஒருவர், கலாம் அவர்களை தன் நாட்டில் ‘இராக்கெட்’ விடவேண்டும் என்று கூறிய போது, கலாம் அவர்கள் இந்தியாவில் மட்டும்தான் இராக்கெட் விடுவேன் என்று கூறினார். இது மட்டுமல்லாமல், குழந்தைகள், அவர்கள் வாழ்க்கையை வீணடிக்காமல் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்று நினைத்தார். இவர் தமிழ் மீது மிகவும் பற்றுக் கொண்டவர். இவரைப் போலவே நானும் ஒரு பெண் அப்துல்கலாமாக ஆவேன். இவரின் தமிழ்ப்பற்று மற்றும் இவர் இந்தியாவின் மீது வைத்துள்ள மரியாதை என்னை மிகவும் ஈர்த்தது. இவரைப் போலவே நானும் என் வாழ்க்கையை ஒழுங்காகப் பயன்படுத்தி இந்த நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வேன்.

த. மஞ்சுப்ரியா VIII – A

எனது வாழ்வில் எனக்கு முக்கிய வழிகாட்டி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆவார்.

இவரது தந்தை ஒரு படகோட்டி ஆவார். இவர் தமிழ்நாட்டிலுள்ள இராமேஸ்வரம் மாவட்டத்தில் பிறந்தார்.இவர் சிறந்த பேச்சாளர் ஆவார். இவர் ISROவில் விஞ்ஞானி ஆக விரும்பினார். முதல் ஆறு abj1இடத்தைப் பிடிப்பவர்கள் விஞ்ஞானி ஆவார்கள். ஆனால் அப்துல் கலாம் ஏழாவது இடத்தைப் பிடித்தார். இதனால், அவரால், ISRO-வில் சேர முடியவில்லை. ஆனால் இவர் இந்தியாவின் சிறந்த விஞ்ஞானியாகத் திகழ்ந்தார். இதனால், இந்திய அரசு 2002- ஆம் ஆண்டு கலாமை குடியரசுத்தலைவர் ஆக்கியது. இவர் 2007-ஆம் ஆண்டு பதவிவிலகினார். இவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மக்களுக்கு பல நன்மைகளைச் செய்துள்ளார். இதனால் மக்கள் இவரை ‘மக்களின் ஜனாதிபதி’ என அழைப்பர். இவர் தனது பார்வையில் பாரதத்தைப் பற்றி நிறைய கூறியுள்ளார். எனவே வருங்கால இளைஞர்களாகிய மாணவர்களைப் பார்த்து ‘கனவு காணுங்கள்’ என்று கூறி பாரதத்தை உயர்த்திட வழி கூறியுள்ளார்.

சி.க.லட்சுமிநாராயணன் VIII – C

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *